.

Pages

Sunday, December 31, 2017

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்டி ~ 300 பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச. 31
கின்னஸ் சாதனை முயற்சியாக இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேலக்ஸி இன்டர்நேஷனல் மற்றும் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி இணைந்து விவசாயத்தை போற்றும் வகையில், பரத நாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்ச்சி பள்ளி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மலை அய்யன் தொடங்கி வைத்தார்.

உலகம் முழுவதும் 5 கண்டங்கள் 29 நாடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டு, பரத நாட்டியம் ஆடினர். முடிவில் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளித்தாளாளர் வீ.சுப்பிரமணியன் கேடயப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி நடன ஆசிரியர் ஏ.ரமேஷ் கண்ணன் செய்தார். பள்ளி தமிழ் ஆசிரியர் எம்.வீரமணி வரவேற்றுப்பேசினார். நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கே.வி.எம் கணேஷத் தேவர், எம்.எம்.எஸ் அப்துல் கரீம், இராம. குணசேகரன், ஆர்.எஸ் வெங்கடாசலம், அக்ரீ எம்.எம் கணேஷன், ஆர்.அண்ணாமலை, ஆர். ஆத்மநாபன், எம்.மனியரசர், எல்.சிவா, எஸ். செல்வகுமார், எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.