சவுதி ஜித்தா பகுதியில் நூற்றுக்கணக்கான அதிரை பிரமுகர்கள் அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில், சிலர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜித்தாவில் பணியாற்றும் சமூக ஆர்வலர் அஜ்வா நெய்னா ஏற்பாட்டின் பேரில், விடுமுறை தினமான சனிக்கிழமை மெக்காவில் உள்ள புனிதமிகு வரலாற்று சிறப்பிடங்களை காண திட்டமிட்டனர். அதன்படி, சவுதி ஜித்தாவில் வசிக்கும் 10 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 50 பேர் நேற்று சனிக்கிழமை காலை பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். பயண குழுவில் அஜ்வா நெய்னா, அஸ்லம், சம்சுதீன், தாஜுதீன், ஆபிதீன், அஜீஸ், மன்சூர், மீராஷா, இப்ராஹீம், ரித்வான், அஹமது அலி, ஹபீப், இலியாஸ், ஜமால் ஆகியோர் குடும்பங்களை சேர்ந்த பிரமுகர்கள் இடம்பெற்றனர்.
பயணத்தை அப்துல் அஜீஸ் மகன் அப்துல் பாசித் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். இலங்கை பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் மவ்லவி ஜியாத் மெக்காவில் உள்ள இடங்களின் வரலாற்று சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில், ஹுதைபியா உடன்படிக்கை, அருங்காட்சியகம், அரஃபா, ஜபல் அல் நூர், முஜ்தலிஃபா, மினா, ஹிரா குகை அடிவாரம் உள்ளிட்ட மேலும் சில வரலாற்று சிறப்பிடங்களை கண்டு ரசித்தனர். பயண முடிவில் மீராஷா ராஃபியா மகள் ஷபீனா துஆ ஓதி நிறைவு செய்தார்.
சுற்றுலா பயணத்திற்கு தலைமை ஏற்று அழைத்து சென்ற அஜ்வா நெய்னா கூறியது;
'சவுதி ஜித்தாவில் பணியாற்றும் அதிரை குடும்பங்களில் சிலர் வாரந்தோறும், விடுமுறை தினங்களில் ஒன்று கூடி உணவருந்துவது, அருகில் உள்ள பார்க், மியுசியம் போன்ற இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். இந்தமுறை, புனிதமிகு மெக்கா மாநகரின் வரலாற்று சிறப்பிடங்களை காண சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். அதன்படி, காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் ஜித்தா வந்தடைந்தோம். இதன்மூலம், மெக்காவில் உள்ள புனிதமிகு இடங்களில் சிலவற்றை முதன்முறையாக குடும்பத்துடன் காணநேரிட்டது. மேலும் குடும்பங்களுக்கிடையே பரஸ்பரம் நலம் விசாரிப்பு, நெருங்கிப் பழகும் வாய்ப்பு, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறவும், புரிந்துணர்வு ஏற்படவும், கலாச்சாரத்தை கட்டிக்காக்கவும் இந்த சுற்றுலா பயணம் அமைந்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்' என்றார்.
தம்பிகளே! மிக்க மகிழ்ச்சிக்குரிய செய்தி. இன்ஷா அல்லாஹ், அடுத்து வரும் பெருவிடுமுறையில், மதீனா மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்குப் பயணம் செய்ய இப்போதே திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். வரலாறு அறிந்து, வாழ்க்கை செம்மையுறும்.
ReplyDelete