.

Pages

Tuesday, December 26, 2017

அமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பாராட்டு!

அதிரை நியூஸ்: டிச.26
அமீரகத்தின் மிக இளம் வயது விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பாராட்டு.

அமீரகத்தின் மிக இளம் வயது விஞ்ஞானியாக 12க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள மாணவி பாத்திமா அல் காபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது சமீபத்திய கண்டுபிடிப்பான ரோபோ ஒன்று தான் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களிடம் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.

சோதனை அடிப்படையில் உருவாகியுள்ள இந்த ரோபோ, மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல இயலாத நாட்களில் மாணவருக்கு பதிலாக பள்ளிக்குச் சென்று, வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனிக்கும், ஆசிரியர்களுடன் பாடம் குறித்த சந்தேகங்களை கேட்கும், இவை அனைத்தையும் பள்ளிக்கு வர இயலாத அந்த மாணவர் பின்பு தெரிந்து கொள்ளமாறு உருவாக்கி இருந்தார்.(கட் அடிக்கிற பசங்களுக்கு அப்ப ஜாலி தான்)

(இதன் வளர்ச்சி வகுப்பறையுடன் நின்றுவிடாமல் பல்வேறு ஆக்கபூர்வ பணிகளுக்கும் பயன்படலாம். உதாரணத்திற்கு நமக்கு பதிலாக செமினார்கள், ஓர்க் ஷாப்கள், கம்பெனி மீட்டிங்குகள், நம்ம நாட்டு மந்திரிகளின் மந்திரி சபை கூட்டங்கள் போன்ற இன்னும் பல)

இந்த கண்டுபிடிப்பை பற்றி அறிந்த அபுதாபி பட்டத்து இளவரசர் தனது 'கஸ்ர் அல் பஹர்' அரண்மனைக்கு மாணவியை வரவழைத்து பாராட்டினார். இந்த நிகழ்வை தொடர்ந்து தனது பொறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக அம்மாணவி தெரிவித்தார்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.