.

Pages

Wednesday, December 27, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்டின் கீழ் இயங்கிவரும், காதிர் முகைதீன் கல்லூரியில் உத்தம திருநபியின் உதய தினவிழா புதன்கிழமை காலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு, எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் வரவேற்றுப்  பேசினார்.
சிறப்பு விருந்தினராக, காயல்பட்டினம் மஹ்லரா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி, அல்ஹாபிழ் எஸ். ஸெய்யிது அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டு மீலாது விழா சிறப்புரை ஆற்றினார்.

விழா முடிவில், கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அ. கலீல் ரஹ்மான் நன்றி கூறினார். இதில், சென்னை உயர்நீதிமன்ற ஒய்வுபெற்ற வழக்குரைஞர், முன்னாள் வஃக்ப் வாரியத் தலைவர் ஏ.ஜே அப்துல் ரெஜாக், எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜே முகம்மது அஸ்லம், எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.