.

Pages

Sunday, December 24, 2017

அதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி !

அதிராம்பட்டினம், டிச.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55) மீனவர். இவர் அருகில் உள்ள கட்டுமாவடி என்ற ஊருக்கு சென்றுவிட்டு, இருசக்கர மோட்டார் வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது செந்தலைவயல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே வந்து கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மீனவர் சேகர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக சேகர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.