.

Pages

Saturday, December 30, 2017

தமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் மனுக்களை பெறுகிறார்!

தஞ்சாவூர் மாவட்டம், தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் சலங்கை நாதம் நிறைவு விழா மற்றும் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 171வது  ஆராதனை துவக்க விழா நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கலந்து கொள்ள 01.01.2018 அன்று வருகை தரவுள்ளார்கள்.

02.01.2018 அன்று தஞ்சாவூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் மாலை 3.30 மணியிலிருந்து 05.00 மணி வரை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள்  மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க உள்ளார்கள். 

எனவே, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை சந்திக்க விருப்பமுள்ள மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் 02.01.2018 ஆம் தேதி அன்று மாலை 3.30 மணியிலிருந்து 5.00 மணி வரை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை சந்தித்து மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.