.

Pages

Friday, December 29, 2017

துபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு !

அதிரை நியூஸ்: டிச.29
ஜனவரி 1 ஆம் தேதி அன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் துபை ஃபிரேம் பில்டிங்

போட்டோ ஃபிரேம் வடிவில் துபையில் கட்டப்பட்டு வந்து சுற்றுலா முக்கியத்துவம் மிகுந்த கட்டிடம் 'BERWAZ DUBAI' 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.

இந்த ஃபிரேம் பில்டிங் உச்சியிலிருந்து பழைய துபையின் கட்டிடங்கள், வின்னைத் தொடும் புதிய துபையின் கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்டு வரும் அதிநவீன கட்டிடங்கள் என துபையின் கலாச்சார பிம்பங்களை 360 டிகிரி கோணத்தில் ரசிக்கலாம்.

மேலும், தரை தளத்தில் டான்சிங் பவுண்டைன் எனப்படும் இசைக்கேற்ப நடனமாடு நீர்வீழ்ச்சி அமைப்புக்கள் மற்றும் மியூசியம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.

பெரியவர்களுக்கு 50 திர்ஹமும், குழந்தைகளுக்கு 30 திர்ஹமும் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 வயதிற்கு கீழள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். முதியவர்கள் மற்றும் பிறர் உதவி தேவையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கும் அவருக்கு (2 பேர் வரை) துணையாக வருபவருக்கும் இலவசம்.

ஜபீல் பார்க் அருகே அமைந்துள்ள இந்த ஃபிரேம் பில்டிங்கை அல் ஜாஃபிலியா மெட்ரோ அல்லது பஸ் நிறுத்தங்களில் இறங்கி சென்றடையலாம். வாகனம் வைத்திருப்போர் அல் ஜபீல் பார்க் கேட் எண்: 1 அருகே அமைந்துள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வரலாம்.

பார்வை நேரம்: தினசரி காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரை

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.