.

Pages

Sunday, February 11, 2018

துபையில் உலகின் மிக உயரமான ஹோட்டல் நாளை (பிப்.12) திறப்பு!

அதிரை நியூஸ்: பிப்.11
உலகின் மிக உயரமான ஹோட்டல் நாளை (12.02.18) துபையில் திறக்கப்படுகிறது.

உலகிலேயே மிக உயரமான பில்டிங் என்ற பெருமையை புரூஜ் கலீபா (Burj Khalifa) ஏற்கனவே தக்கவைத்துள்ள நிலையில் தங்கும் விடுதிகளிலேயே மிக உயரமான விடுதிகள் என்ற பெருமையை போட்டி போட்டு சேர்க்கத் துவங்கியுள்ளது துபை.

உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற பெருமையை இதுவரை துபை ஷேக் ஜாயித் சாலையில் 1,603 அறைகளுடன் இயங்கி வரும் JW Marriott Marquis Hotel  என்ற ஹோட்டலே தக்கவைத்து இருந்தது. 2012 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலின் உயரம் 1,165 அடியாகும். இந்த சாதனையை நாளை துபையில் திறக்கப்படவுள்ள இன்னொரு ஹோட்டல் முறியடிக்கவுள்ளது.

12.02.2018 அன்று அதே ஷேக் ஜாயித் சாலையில் DIFC cluster மற்றும் Emirates Towers அருகாமையில் திறக்கப்படவுள்ள Gevora என்ற புத்தம்புதிய ஹோட்டலின் உயரம் 1,167.78 அடியாகும் (376 மீட்டர்). 75 தளங்களுடன் உள்ள இந்த ஹோட்டலில் 528 அறைகள் மட்டுமே உள்ளன.

துபையில் மேலும் 2 மிக உயரமான ஹோட்டல்களும் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. Rose Rayhann,என்ற ஹோட்டல் 1,093 அடிகளுடனும், Burj Al Arab என்ற ஹோட்டல் 1,053 அடிகளுடனும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் 5 பில்லியன் திர்ஹம் செலவில் Emirates Towers Business Park  என்ற விடுதியும், Uptown Dubai என்ற அதி உயர இரட்டை விடுதியும் கட்டப்பட்டு வருகின்றன. இதன் திறப்பு விழாக்களின் போதே இதன் உயரங்கள் குறித்த விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.