தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் கே.பிரேம், மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம், வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் எஸ். முகமது ரபி, அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை ஏரிப்புறக்கரை நுழைவாயில் கல்லூரி முக்கம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக புனரமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது செய்து இருந்தார். முடிவில் செயலர் எம்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.
மண்டலத் தலைவர் மரியாதைக்குரிய செல்வம் சார் அவர்கள் நீடுடிவாழ வாத்துக்கள்
ReplyDeleteஎனக்கு சவுதி அரபியாவில் செல்வம்சார் டெக்னிக்கல் சூப்ரண்டாக இருந்த காலங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றன