.

Pages

Sunday, February 11, 2018

சவுதி ஜித்தா அய்டா வெள்ளி விழா கொண்டாட்டம் ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

ஜித்தா பிப்ரவரி 11
ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு  25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம்  09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 08 மணிக்கு நிகழ்ச்சிக்கு அனைவரும் வர தொடங்கினர்.

 நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் வரவேற்றுப் பேசினார்.

 நிகழ்ச்சியின் அமீராக இருந்து அய்டாவின் செயலர் சகோ. சம்சுதீன் நிகழ்ச்சியினை நடத்தினார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை, சகோ. ஹபிபுர்ரஹ்மான. சகோ.தமீம், (அல்சுஐபி)சகோ. ஜபருல்லாஹ்  பதிந்தனர்.

அய்டா பொருளாளர்கள். சகோ. அப்துல் அஜீஸ், சகோ. இப்ராகிம் ஆகியோர் நிகழ்ச்சியின் பொருளாளர்களாக இருந்தனர்.

 சிறுவன் அப்துல் பாசித் கிராத் ஓதினார்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் சகோ. பத்ர், சகோ.  சுவைஃப் & டீம் சார்பில் காலை உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

பின்பு சகோ. மீராசாஹ் ரஃபியா, சகோ.அப்துல் அஜீஸ் தலைமையில் விளையட்டுப் போட்டிகள் நடந்தன.  இவர்களுக்கு சகோ.இப்ராஹிம், சகோ ஷம்சுதீன்(அல்பைக்) உறுதுணையாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்
.
காலை 11 மணிக்கு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இதனை சகோ.ஜஃபருல்லாஹ், சகோ. சரபுதீன்(கோர்ட்டினா),சகோ. முனாஸ்கான் ஆகியோர் நடத்தினர்.

பேச்சுப்போட்டியின் தலைப்பாக, 1 சதக்கத்துல் ஜாரியா நிரந்தர நன்மை, 2 சுத்தம் ஈமானில் பாதி, 3 மொபைல் இல்லாத என் வாழ்க்கை, 4 பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கடமைகள், 5, நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பில் கலந்துகொண்டு பேசிய மாணவர்களின் பேச்சுக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

காலை 11:45 முதல் 12:15 வரை நீச்சல்.

அதனை தொடர்ந்து ஜும்ஆ தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டது.  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து  அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது. உணவு விநியோகிக்கும் பொறுப்பு சகோ. ஜெய்லானி(அப்துல் காதிர்), சகோ. அஜ்வா நெய்னா, சகோ அஷ்ரப் ஆகியோர் மிகவும்  சிறப்பாக செய்தனர்.

பின்பு ஹாபிள் நெய்னா தலைமையில் மாணவர்களுக்கான கிராத் போட்டி நடந்தது. இதில் சிறப்பாக கிராத் ஓதியவர்களை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், சீனியர்களுக்கான வாலிபால் போட்டிகள் என  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து. அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ. ஆபிதீன் அய்டாவின் தோற்றம் வளர்ச்சி குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அய்டா ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. எம்.எஃப். அஹமது அஸ்லம் அய்டாவின் சாதனைகள் மற்றும்  எவ்வாறு செயல்படுகிறது? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் அதிரை பைத்துல்மாலிலிருந்து வந்த வாழ்த்து,  அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அனுப்பிய வாழ்த்து,  அதிரை பைத்துல்மால் தம்மாம் கிளையிலிருந்து சகோ. ஃபத்ஹுத்தீன் அனுப்பிய வாழ்த்து மற்றும் அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ ரஃபியா அனுப்பிய வாழ்த்துரை ஆகியவை பகிரப்பட்டன.

மாலை சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு சகோ முனாஸ்கான் அய்டாவில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

அதனை தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுக்குரிய வெற்றியாளர்களின் பெயரை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் அறிவித்தார்.

மேலும் அய்டாவின் 25 வது ஆண்டை சிறப்பிக்கும் நினைவு பரிசினை அய்டாவின் நிர்வாகிகள் கையில் முன்னாள் நிர்வாகிகள் வழங்கினர்.

விழாவின் பரிசுப் பொருட்களுக்கு  ஸ்பான்சர்களாக சகோ. A. K. சாகுல் ஹமீது அவர்கள். மற்றும் சகோ. ஆபிதீன் அவர்கள் (கோ கோ கோலா) .
இந்நிகழ்ச்சி ஆண்கள், பெண்கள் என தனித்தனியே அமையப்பெற்ற சிறப்பு இஸ்திராஹாவில் இருபாலருக்கும், மற்றும் சிறுவர்களுக்கும் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி அய்டா தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்க  இஷா தொழுகையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

அய்டா வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஜித்தா, மதீனா, அப்ஹா என சவுதியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- ஜாஃபர் ஹசன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.