தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் அதிமுக சார்பில் அமைதிப் பேரணி சனிக்கிழமை காலை நடத்தப்பட்டது.
நிகழ்சிக்கு தலைமை வகித்த, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2 நிமிட மவுண அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அதிமுகவினர் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகம் வரை பேரணியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் திரும்பினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை செய்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலர் பி. சுப்ரமணியன், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், அதிரை பேரூர் துணைச் செயலாளர் முஹம்மது தமீம், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் ஹாஜா பகுரூதீன், முகமது முகைதீன், யஹ்யாகான், அப்டா தமீம், அப்துல் ரஹ்மான், அபூபக்கர், லியாகத் அலி, அகமது ஹாஜா, துரை.பாஞ்சாலன், சங்கர், அசோக், துரை. முருகானந்தம், அபுதாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.