தஞ்சாவூர் மாவட்டத்தில் குந்தவை நாச்சியர் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ராஜா சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி மற்றும் பாரத் அறிவியல் கலைக்கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தொகுதி 4 (Gorup IV Exam) தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (11.02.2018) ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது தேர்வு எழுதுபவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு 209 மையங்களில் 62135 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 52,414 நபர்கள் தேர்வு எழுதினர். 9,721 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது 84% ஆகும்.
தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் அதாவது 10.30 மணிக்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்மையாக தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க 39 பறக்கும் படைகளும், 45 நிலையான கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 209 ஆய்வு அலுவலர்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இவ்ஆய்வின் போது தஞ்சாவ10ர் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தார்.
ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது தேர்வு எழுதுபவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு 209 மையங்களில் 62135 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 52,414 நபர்கள் தேர்வு எழுதினர். 9,721 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது 84% ஆகும்.
தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் அதாவது 10.30 மணிக்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்மையாக தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க 39 பறக்கும் படைகளும், 45 நிலையான கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 209 ஆய்வு அலுவலர்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். இவ்ஆய்வின் போது தஞ்சாவ10ர் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.