.

Pages

Sunday, February 11, 2018

அதிரையில் TNTJ கிளை நிர்வாகி இல்லத் திருமணம் !

அதிராம்பட்டினம், பிப்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவில் இன்று (பிப்.11) ஞாயிற்றுக்கிழமை காலை நபிவழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1 துணைத் தலைவர் அ.மு அப்துல் வஹாப் அவர்களின் மகன் முகமது ருத்வானுதீன் (26) மணமகன், மேலத்தெருவை சேர்ந்த பகுருதீன் அவர்களின் மகளை 24 கிராம் ஆபரணத் தங்க நகை மஹராக கொடுத்து மணமுடித்தார்.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் துணைத் தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு 'நபிவழித் திருமணம் ஏன்?' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.  முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மணமகனை வாழ்த்தினர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.