அதிராம்பட்டினம், செப். 30
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதையொட்டி, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ்.அகமது ஹாஜா தலைமை வகித்தார். கூட்டத்தை, கே. ஜாகிர் உசேன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுக்கூர் எம். ஃபவாஸ், மமக மாவட்டச் செயலாளர் நூர் முகமது, தமுமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சேக் மைதீன், தமுமுக - மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் இலியாஸ், மாநாடு குழு அதிரை பேரூர் தலைவர் ஜே. அப்துல் கபூர் (மரைக்கான்), தமுமுக/மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது, தமுமுக - மமக அதிரை பேரூர் பொருளாளர் எஸ்.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை பேச்சாளர் திருச்சி ரபீக் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முத்தலாக் தடை சட்டதை ரத்து செய்ய வேண்டும்.
2. கடைமடைப் பகுதிக்கு தாமதமின்றி உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
3. கஞ்சா, லாட்டரி, நம்பர் லாட்டரி ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
4. 24 மணி நேர டாஸ்மாக் மதுபான கடையை ஒழிக்க வேண்டும்.
5. ஓரினச்சேர்க்கை தீர்ப்பை மறுபரீசிலனை செய்யவேண்டும்.
6. ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் குடிநீர், சுகாதாரம் 20 ஆண்டுகளாக கேள்வி குறியாக உள்ளது. இவற்றை சீர் செய்ய வேண்டும்.
7. அதிரை ~ மதுக்கூர் வழித்தடத்தில் புதிதாக பஸ் சேவை தொடங்க வேண்டும்.
8. அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுநீரகப் பிரச்சனையால் தொடர் மரணம் ஏற்படுகிறது. எனவே, அதிராம்பட்டினம் மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கும் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை தமுமுக, மமக நிர்வாகிகள் ஜெ.ஹக்கீம், ஏ.சலீம், இம்ரான், அசார், எஸ்.முகமது யூசுப், நசுருதீன், ரியாஸ், சேக்தாவூது ஆகியோர் வாசித்தனர்.
தொடக்கத்தில், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். முடிவில், மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், தமுமுக, மமக கட்சியினர், தோழமை கட்சியினர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதையொட்டி, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ்.அகமது ஹாஜா தலைமை வகித்தார். கூட்டத்தை, கே. ஜாகிர் உசேன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுக்கூர் எம். ஃபவாஸ், மமக மாவட்டச் செயலாளர் நூர் முகமது, தமுமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சேக் மைதீன், தமுமுக - மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் இலியாஸ், மாநாடு குழு அதிரை பேரூர் தலைவர் ஜே. அப்துல் கபூர் (மரைக்கான்), தமுமுக/மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது, தமுமுக - மமக அதிரை பேரூர் பொருளாளர் எஸ்.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை பேச்சாளர் திருச்சி ரபீக் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முத்தலாக் தடை சட்டதை ரத்து செய்ய வேண்டும்.
2. கடைமடைப் பகுதிக்கு தாமதமின்றி உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
3. கஞ்சா, லாட்டரி, நம்பர் லாட்டரி ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
4. 24 மணி நேர டாஸ்மாக் மதுபான கடையை ஒழிக்க வேண்டும்.
5. ஓரினச்சேர்க்கை தீர்ப்பை மறுபரீசிலனை செய்யவேண்டும்.
6. ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் குடிநீர், சுகாதாரம் 20 ஆண்டுகளாக கேள்வி குறியாக உள்ளது. இவற்றை சீர் செய்ய வேண்டும்.
7. அதிரை ~ மதுக்கூர் வழித்தடத்தில் புதிதாக பஸ் சேவை தொடங்க வேண்டும்.
8. அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுநீரகப் பிரச்சனையால் தொடர் மரணம் ஏற்படுகிறது. எனவே, அதிராம்பட்டினம் மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கும் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை தமுமுக, மமக நிர்வாகிகள் ஜெ.ஹக்கீம், ஏ.சலீம், இம்ரான், அசார், எஸ்.முகமது யூசுப், நசுருதீன், ரியாஸ், சேக்தாவூது ஆகியோர் வாசித்தனர்.
தொடக்கத்தில், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். முடிவில், மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், தமுமுக, மமக கட்சியினர், தோழமை கட்சியினர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.