.

Pages

Tuesday, September 25, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக்கம் மற்றும் வரவேற்பு விழா!

அதிராம்பட்டினம், செப்.25.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், விலங்கியல் சங்கம் தொடக்கம் மற்றும்  இளங்கலை, முதுகலை, எம்.பில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து,
விலங்கியல் சங்கத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இதில், விலங்கியல் கல்வி படிப்பதால், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். சமூகத்தில் பெரும் அச்சுறுத்துலாக இருக்கும் தீய பழக்கத்திலிருந்து விலகி நிற்கவேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக மக்கள் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும்' என்றார். 
 
முன்னதாக, விலங்கியல் சங்கச் செயலாளர் மாணவி  ஜே.ஜெயலட்சுமி வரவேற்றுப் பேசினார்.

சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. அம்சத் பேசுகையில்; மாணவர்களின் ஆங்கிலப் புலமையை வளர்ப்பது, தேர்வில் வெற்றி பெற வைப்பது, உயர்கல்வி பயில கல்விக்கட்டணம் செலுத்துவது மற்றும் கடன் உதவி செய்வது, மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து  வளர்ப்பது, தனித்திறமையை உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது, மற்ற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க செய்வது, தலைமைப் பண்புகளை உருவாக்குவது, மாணவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்க உதவுவது, மாணவர்களை தேச நலனுக்காக சமூகப் பணியாற்ற  உச்சப்படுத்துவதே விலங்கியல் சங்க செயல்பாடுகள்' என்றார்.

விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் பி. குமாரசாமி தனது உரையில்;
'மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு விசுவாசமாக நடக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயரவேண்டும் ' என்றார். 

விழாவில், பேராசிரியர்கள் கே. முத்துக்குமரவேல், ஓ. சாதிக், வி. கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜே சுகுமாரன், என். வசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை மாணவி ஆர். விஜயலலிதா தொகுத்து வழங்கினார்.  முடிவில் விலங்கியல் சங்கப் பொருளாளர் மாணவி ஜே. சூர்யா நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.