.

Pages

Saturday, September 29, 2018

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு !

தஞ்சாவூர், செப். 29
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தஞ்சை மாநகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை கவிதா மன்றத்தில் இன்று (செப். 29) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பி.எஸ் ஹமீது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன், பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.கே ஹாஜா நஜ்முதீன், எஸ்.எஸ் நூர்தீன், மாவட்ட துணைச்செயலாளர் எம்.ஜெ அப்துல் ரவூப், மாநில கெளரவ ஆலோசகர் ஆர்.முகமது பாருக், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் அதிரை ஏ.சாகுல் ஹமீது, அதிரை பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். கூட்டத்தில், தஞ்சை மாநகர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஜி.எஸ். ஜாஃபர், செயலாளராக அதிரை முகமது அபூபக்கர், மகளிர் அணி அமைப்பாளராக ஷாஹிரா பானு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மண்டல மாநாடு நடத்துவது, மாவட்டத்தின் புதிய பகுதிகளில் பிரைமரி அமைப்பது, புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, வழுத்தூர் உள்ளிட்ட தஞ்சை தெற்கு மாவட்ட பகுதிகளின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஜி.எஸ். ஜாஃபர்
அதிரை முகமது அபூபக்கர்
ஷாஹிரா பானு
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.