.

Pages

Saturday, September 29, 2018

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியது!

அதிரை நியூஸ்: செப். 29
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியது

இந்தோனேஷியாவின் மத்திய மாகாணமான (Central Province) சுலவேசி தீவை (Sulawesi Island) ரிக்டர் அளவில் 7.5 (Ricter Scale) என பதிவான சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து சுமார் 2 மீட்டர் உயரம் எழுந்த சுனாமி பேரலைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தாக்கின. இந்த நிகழ்வுகளில் பல கட்டிடங்கள், வாகனங்கள் நொறுங்கியதுடன் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றாலும் மின்சாரம், தகவல் தொடர்புகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சேதாரமும் உயிர்பலிகளும் அதிகமிருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவு டொன்கலா மாவட்டம் (Dongala district) பலு (Palu) என்ற ஊரின் தலீஸா கடற்கரை (Talisa Beach) பிராந்தியத்தையே சுனாமி பேரலைகள் தாக்கி கடும் சேதங்களை விளைவித்துள்ளன. ஒரு கப்பல் ஒன்றும் ஊருக்குள் அடித்துவரப்பட்டுள்ளது. தலீஸா கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரத்தில் கடலுக்குள் இப்பூகம்பம் ஏற்பட்டதுடன் பூகம்பத்திற்கு பிந்தைய 3 அதிர்வுகளும் 6.0, 7.4 மற்றும் 6.1 என்கிற ரிக்டர் அளவுகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை விடுத்த இந்தோனேஷிய அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்தில் திரும்பப் பெற்றனர் என்றாலும் எதிர்பாராதவிதமாக சுனாமி அலைகள் தாக்கின. இதில் விமான நிலைய ஓடுதளமும் சேதமடைந்துவிட்டது என்றாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணிகள் நடைபெறுகின்றன. மீட்புப்பணிகளில் ராணுவம், போலீஸ், அவசரகால மீட்புப்படையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.news.com.au/technology/environment/natural-wonders/powerful-earthquake-rocks-central-sulawesi-in-indonesia/news-story/dd583a421c9da919879ad42be5453747

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.