பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல ஆலோசனைக் கூட்டம் சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகத்தில் இன்று (செப்.23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அண்மை காலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பயன்பாடு, இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக்கேடுகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும், போதை தடுப்பு குறித்து இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடம் ஒத்துழைப்பு கோருவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக, சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை எதிர்வரும் (28-09-2018) வெள்ளிக்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், உலமாக்கள், சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவாசிகள், அதிராம்பட்டினம் மஹல்லா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்ட ஏற்பாட்டினை, சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் பேராசிரியர் ஏ. அப்துல் காதர் மற்றும் சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
நல்ல முயற்சி , ஒற்றுமையே பலம்
ReplyDelete