.

Pages

Sunday, September 30, 2018

குவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு!

அதிரை நியூஸ்: செப்.30
குவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி குவைத்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் சமர்ப்பித்துள்ள பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து அந்தந்த நாட்டு கலாச்சார அலுவலகங்களின் உதவியுடன் சோதிக்கப்படும் என குவைத் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காணும் தீர்மானத்தினை தொடர்ந்து குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக சுமார் 460 ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசோதிக்க குவைத் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவுற்ற பின்பே அவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 460 பேரும் வளைகுடா உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆவர்.

Source: The Times Kuwait
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.