.

Pages

Wednesday, September 26, 2018

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 26
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி  இணைந்து நடத்திய 'பார்வைக்கோர் பயணம்' கண்தாண விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கே சேது சுப்பிரமணியன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் வீ.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எஸ். கணபதி, கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் கண்தாணம் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.

பேரணியில், கண்தாணத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கண்தானம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றி பேரணியை முடித்து வைத்தார்.

பேரணியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், மாவட்டத் தலைவர்கள் எம்.அகமது, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, டி.பி.கே ராஜேந்திரன், பேராசிரியர் கே.முருகானந்தம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.