.

Pages

Saturday, September 29, 2018

அதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு!

அதிராம்பட்டினம், செப்.29
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஏ.சடையன் (45). இவர் செப்.22-ம் தேதி இரவு தன்னுடைய வீட்டு வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

மற்றொரு சம்பவம்: 
அதிரை காந்தி நகரைச் சேர்ந்தவர் எம். அய்யாமுருகன் (30). இவர் செப்.23-ம் தேதி இரவு அதே பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் எதிரில் சிவக்குமார் என்பவர் வீட்டு வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விட்டார்களாம். மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில், அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.