.

Pages

Saturday, September 22, 2018

சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்தில் சிறப்பு இமிக்கிரேசன் முத்திரை வெளியீடு (படங்கள்)

அதிரை நியூஸ்: செப். 22
சவுதி அரேபியாவின் தேசிய தினம் நாளை (செப்.23) கொண்டாடப்படுவதையொட்டியும், சவுதி மற்றும் அமீரகம் இடையே நிலவும் அரசுசார் ஒற்றுமையை போற்றும் வகையிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை அமீரகம் ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஒன்றாக உலகின் உயரமான கட்டிடமான புரூஜ் கலீபா சவுதி அரேபியாவின் கொடியை பிரதிபலிக்கும் வகையில் பச்சை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபை இமிக்கிரேசன் துறையும் துபை விமான நிலையத்தில் வந்திறங்கும் சவுதி அரேபியர்களின் பாஸ்போர்ட்டுகளில் மட்டும் பதிப்பதற்கென்றே சிறப்பு பச்வை வண்ண முத்திரையை வெளியிட்டுள்ளது இதில் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது, மேலும் சவுதி அரேபிய கொடியில் இடம் பெற்றுள்ள சின்னங்களும் அமீரக சின்னங்களும் ஒன்றாக கலந்துள்ளன.

மேலும் துபை விமான நிலையங்களில் வந்திறங்கும் சவுதி அரேபியர்களுக்கு பிரத்தியேகமாக இனிப்புக்கள், பூங்கொத்துக்கள் மற்றும் காபி வழங்கி வரவேற்கப்பட்டு வருகின்றனர். இமிக்கிரேசன் கவுண்டர்களும் சவுதியின் தேசிய கொடியின் வண்ணத்தை பின்னனியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழன் முதல் தினமும் சவுதியிலிருந்து வரும் தலா ஒரு விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்பு நல்கப்படுகிறது. மேலும் துபை விமான நிலையங்களின் வருகை லவுஞ்சுகளில் சவுதி மற்றும் அமீரக தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.