.

Pages

Thursday, September 27, 2018

துபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன் முதன்முறையாக நடந்த இந்தியர் (வீடியோ)

அதிரை நியூஸ்: செப். 27
இந்திய ராணுவத்தில் ஸ்குவாட்ரன் லீடர் எனும் பதவியில் ராணுவ விமானியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் அபை பிரதாப் சிங். இவருக்கு ஏற்பட்டதொரு விபத்தில் இடுப்புக்கீழ் முற்றாக செயலிழக்க கடந்த 11 வருடங்களாக சக்கர நாற்காலியே கதி என்றானது.

இனி ராணுவ விமானங்களை இயக்க முடியாது என்றானபின் சக்கர நாற்காலியில் இருந்தவாறே கிரிக்கெட் விளையாடும் மாற்றுத் திறனாளி வீரர் ஆனார். இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இடையே சக்கர நாற்காலி வீரர்களுக்கான 20 கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக துபை வந்த இடத்தில் அஜ்மானில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சாதனங்களை கொண்ட தம்பே மருத்துவமனைக்கு (He visited to check out hospital facilities for determined ones. The Thumbay Physcial Therapy and Rehabilitation Hospital in Ajman, known for its physical therapy and rehabilitation) சென்றார்.

அங்கு அவருக்கு strapped a bionic suit என்ற கருவி பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் 11 ஆண்டுகளுக்குப் பின் எந்திரவியல் கருவிகள் (robotic exoskeleton) பொருத்தப்பட்ட உடையின் துணையோடு 5 நிமிடத்தில் சுமார் 20 மீட்டர் தூரம் முதன்முறையாக நடந்தார். ஊன்றுகோல்களோடு இதே தூரத்தை கடப்பதற்கு முன்பு சுமார் 2 மணிநேரம் ஆகுமாம்.

தன்னம்பிக்கை மனிதர்கள் தோற்பதில்லை.


. https://www.khaleejtimes.com/news/general/wheelchair-bound-cricketer-/walks-for-first-time-in-uae-after-11-years

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.