அதிராம்பட்டினம், செப்.27
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் தொடக்க விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் முன்னிலை வகித்தார்.
எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக இளைஞர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எஸ்.பி மோகன் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில், கல்லூரி மாணவர்கள் சமீர் அலி தலைவராகவும், ஐஸ்வர்யா செயலாளராகவும், டி.ஜெயசூர்யா பொருளாளராகவும், ரியாஸ் துணைத்தலைவராகவும், எஸ்.சத்யா துணைச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
விழாவில், கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தல், தூய்மையைப் பேணுதல் ஆகியவற்றை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் சேகரித்து வழங்கும் முதல் 3 மாணவர்களுக்கு, 3, 2, 1 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
விழா முடிவில் பேராசிரியை சுமதி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் தொடக்க விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் முன்னிலை வகித்தார்.
எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக இளைஞர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எஸ்.பி மோகன் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில், கல்லூரி மாணவர்கள் சமீர் அலி தலைவராகவும், ஐஸ்வர்யா செயலாளராகவும், டி.ஜெயசூர்யா பொருளாளராகவும், ரியாஸ் துணைத்தலைவராகவும், எஸ்.சத்யா துணைச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
விழாவில், கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தல், தூய்மையைப் பேணுதல் ஆகியவற்றை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் சேகரித்து வழங்கும் முதல் 3 மாணவர்களுக்கு, 3, 2, 1 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
விழா முடிவில் பேராசிரியை சுமதி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.