.

Pages

Friday, September 28, 2018

அதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை பதிவு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்
கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி, புழுக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், நள்ளிரவில் திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. காற்று வீசியதால் நடுத்தெரு பிரதான சாலையோர வாகை மரம் சாய்ந்து கீழே விழுந்தது. தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி காணப்பட்டன. ஈஸ்ட் கோஸ்ட் சாலை அருகே மின்கம்பி அறுந்து கீழே விழுந்து, பின்னர், அதிராம்பட்டினம் மின்சார வாரிய ஊழியர்களால் சீர் செய்யப்பட்டது.

இன்று (செப்.28) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை பதிவாகியது.

தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு 25.20 மி.மீ, குருங்குளம் 23 மி.மீ, பட்டுக்கோட்டையில் 18.80 மி.மீ, பேராவூரணியில் 3 மி.மீ, ஒரத்தநாடு 1.20 மி.மீ மழை பதிவாகியது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.