கோ-ஆப்டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் குத்து விளக்கேற்றி தீபாவளி சிறப்பு தள்ளுபடியின் முதல் விற்பனையினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது : -
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 83 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள்,கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் வரப்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது தஞ்சாவ10ர் மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.11. கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் ரூ.13 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.4.58 கோடி விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி 2018க்கான விற்பனை இலக்கு ரூ.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் 2017ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.1.75 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது வருகின்ற தீபாவளிக்கு ரூ.1.8 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு, 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இச்சலுகைகளை பயன்படுத்தி, நெசவாளர்களின் வாழ்க்கை சிறக்க, கோ-ஆப்-டெக்ஸ் சிறப்பு விற்பனை துணிகளை பெற்று தீபாவளி பண்டிகையினை சிறந்த முறையில் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கங்காதேவி, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சு.மாணிக்கம், மேலாளர்கள் ப.சரவணன், இரா.வெங்கடாலபதி, கு.கணேசன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.