.

Pages

Friday, September 28, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.28
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை சார்பில், விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர் சபரிமாலா ஜெயகாந்தன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில்,"இதுவரையில் பெண்ணியம் காக்கப் பெரிதும் உழைத்தவர்கள் ஆண்களா? பெண்களா?" என்ற தலைப்பில், கோவை ராகவேந்திரன், கரூர் சதீஸ், திருச்சி கவிமணி, லால்குடி எழில் ஆகியோர் பேசினர்.

முன்னதாக, நிகழ்ச்சி அமைப்பாளர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை பேராசிரியர் பி.கணபதி தொகுத்து வழங்கினார். முடிவில், தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கலீல் ரஹ்மான் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.