.

Pages

Wednesday, September 19, 2018

மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு (படங்கள்)

பேராவூரணி செப்.19-
பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு கருவிகள் முறையாக நிறுவப்பட்டுள்ளனவா. அவசர காலங்களில் வெளியேறும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா என தஞ்சை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.

இதில் முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியர் ஆர்.லலிதா
தலைமையில், முத்திரைத்தாள் கட்டணம் தனி வட்டாட்சியர்
டி.வினோலியா, வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரராஜன், பேரூராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர் இரா.சித்தார்த்தன், பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் கோபிநாத், அரசு மருத்துவமனை  மருத்துவர் டி.சினேகா, வருவாய் துறை கமலநாதன், வருவாய் ஆய்வாளர் அஷ்ரப்அலி, கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

'மருத்துவமனைகளில் தீத்தடுப்பு கருவிகளை புதுப்பிக்கவும், மின்சார சாதனங்களை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ளவும், அவசர காலங்களில் வெளியேறும் வசதிகளை செய்து செய்யவும்' அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.