.

Pages

Friday, September 28, 2018

காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.28
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

கருத்தரங்கில், விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் பி.குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். பட்டுக்கோட்டை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் உழவியல்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.கார்த்திகேயன், பேராசிரியர் ஆர்.மாரிமுத்து ஆகியோர் பூச்சி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பேசினார்கள். கருத்தரங்கு ஏற்பாட்டினை பேராசிரியர் கே.முத்துகுமரவேல் செய்து இருந்தார்.

கருத்தரங்கில்,100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ்.ரவீந்திரன்,  ஓ.சாதிக், வி. கானபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.