.

Pages

Thursday, September 27, 2018

பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.27
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் கட்டுமானப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகத் தண்டவாளங்கள் அகற்றிவிட்டு  நிரந்தர தண்டவாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது எனவும், எஞ்சிய அனைத்து பணிகளும் அடுத்து மாதங்களில் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் சிக்னல் கோபுரம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.

4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை,  ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், இதன் அருகே குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.

5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை உள்ளிட்ட நிலையத்தின் அறைகளுக்கு வர்ணம் பூசும் பணி மற்றும் நுழைவாயில் ரவுண்டான, நடைமேடை தடுப்பு சுவர் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1, பிளாட் பார்ம்-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணிகள் ராட்சஷ  கிரேன் உதவியோடு நடந்து முடிந்துள்ளது. இதில், நடைபாதை  அமைப்பதற்கு தகரத்தால் ஆன சீட் மேல் படிக்கட்டு தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், அடுத்து சில தினங்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பாதையில் கூட்ஸ் ரயில் மூலம் ஜல்லிகள் நிரப்பட்டு வருகின்றன.

8. வாகன நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.