அமமுக அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகரிடம் அக்கட்சி நிர்வாகிகள் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட 4500 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகரிடம் அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் அண்மையில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அமமுக எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, விவசாய அணி, தகவல் தொழில்நுட்பம் (ஆண்கள்), தகவல் தொழில்நுட்பம் (பெண்கள்) அணி, மாணவரணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, பொறியாளர் அணி, அண்ணா தொழில்சங்கம், வர்த்தக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, சிறுபான்மை நலப் பிரிவு அணி, மீனவர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட சார்பு அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 216 பேர் கொண்ட நிர்வாகிகள் பட்டியலை, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகரிடம் அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.ஜமால் முகமது செவ்வாய்கிழமை ஒப்படைத்தார்.
அருகில், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் தம்பி. ரமேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பஞ்சு ராமச்சந்திரன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் சிவா ராஜேஷ் கண்ணன், அதிராம்பட்டினம் பேரூர் இணைச்செயலாளர் அய்யாவு, பொருளாளர் ரபீக், எம்ஜிஆர் மன்ற செயலாளர் இராஜேந்திரன் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளை நமதே
ReplyDelete