.

Pages

Tuesday, September 18, 2018

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடத்த ஆட்சியர் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் குழந்தைகள் நலக்குழு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (18.09.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது : -
குழந்தைகள் இல்லங்கள் இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இயங்க வேண்டும். குழந்தைகள் நலன்குழு ஆணை பெற்ற பின் குழந்தை நல இல்லத்தில் சேர்க்க வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளிடையே தனி மனித ஒழுக்கம், சகிப்பு தன்மை, தற்கொலை எண்ணத்தை தவிர்த்தல், தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்துதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் நல்லத்தொடுதல், கெட்ட தொடுதல் சம்மபந்தமாக பயிற்சி வழங்கப்பட வேண்டும். தத்தெடுத்தல் சம்மந்தமாக பொது மக்களிடம் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.   ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி குழந்தை சார்ந்த பிரச்சினைகள்  ஆய்வு  செய்வதனால், கிராமங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இக்கூட்டத்தில் முதன்மை நடுவர் (மூன்று) தங்கமணி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திலகவதி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இந்துபாலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் சுபாசினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மாவட்ட குழந்தைகள் இல்ல ஆய்வுக்குழு உறுப்பினர்கள், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர், சைல்டு லைன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.