.

Pages

Sunday, September 30, 2018

துபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!

அதிரை நியூஸ்: செப்.30
ஆண் ஒருவரை கழுத்து சட்டையை பிடித்துக் கொண்டே 6 மணிநேரம் நடக்கவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பெண்.

துபையில் வீட்டு வாடகையை கொடுக்காமல் கடந்த ஜனவரி மாதம் கம்பி நீட்டிய ஆண் ஒருவரை எதேச்சையாக தெருவில் கண்ட பெண் ஒருவர் தன்னுடைய இன்னொரு ஆண் தோழரின் உதவியுடன் சட்டையின் கழுத்தை பிடித்தவாறே பர்துபையிலுள்ள ரிஃபா போலீஸ் ஸ்டேஷனுக்கு (Rifa'a Police Station) நடக்கவிட்டு இழுத்து வந்தார்.

மாலை 7 மணியளவில் மம்ஸர் பூங்கா அருகில் பிடித்த நபரை பர்துபையிலுள்ள ரிஃபா காவல் நிலையத்திற்கு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடக்கவிட்டே கொண்டு வந்து சேர்த்தனர். அந்த ஆணை இழுத்து வரும் வழியில் கன்னத்தில் அறைந்தும் ஆண் தோழரைவிட்டு ரோட்டில் அவ்வப்போது அடித்துக் கொண்டும், அவ்வாறு அடிப்பதை மகிழ்ச்சியாக செல்போனில் அந்த ஆண் தோழர் வீடியோ எடுத்துக் கொண்டும் வந்தனர்.

சுமார் 6 மணிநேரம் சட்டையின் கழுத்தை பிடித்தவாறே வாடகை ஏய்ப்பாளரை பிடித்து வந்த அந்தப் பெண்ணும் அவரது தோழரும் தற்போது கம்பி எண்ணுகிறார்கள். ஏன்? அமீரக சட்டப்படி எவரையும் கைநீட்டி அடிப்பதும், பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்துவதும், அதை வீடியோ எடுப்பதும், (6 மணிநேரம் நடக்க வைத்ததன் மூலம்) சித்திரவதை செய்ததும் குற்றமாக பதியப்பட்டது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.