.

Pages

Sunday, September 23, 2018

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.23
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல ஆலோசனைக் கூட்டம் சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகத்தில் இன்று (செப்.23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அண்மை காலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பயன்பாடு, இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக்கேடுகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும், போதை தடுப்பு குறித்து இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடம் ஒத்துழைப்பு கோருவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

இதுதொடர்பாக விவாதிப்பதற்காக, சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை  எதிர்வரும் (28-09-2018) வெள்ளிக்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், உலமாக்கள், சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவாசிகள், அதிராம்பட்டினம் மஹல்லா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

கூட்ட ஏற்பாட்டினை, சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் பேராசிரியர் ஏ. அப்துல் காதர் மற்றும் சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
 
 

1 comment:

  1. நல்ல முயற்சி , ஒற்றுமையே பலம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.