.

Pages

Monday, April 13, 2020

அதிராம்பட்டினத்தில் 113 குடும்பங்களுக்கு அத்தியவாசிய உணவுப்பொருட்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.13
அதிராம்பட்டினம் கிராமப்புற பெண்கள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட கூலித் தொழிலாளர்களின் 113 குடும்பங்களுக்கு, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், சங்கத்தின் சார்பில், கடந்த ஏப்.11, ஏப்.12 ஆகிய 2 தினங்கள் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஏற்பாட்டினை, சங்கத்தின் திட்ட ஆலோசகர் ஜி.எஸ் இராஜமாணிக்கம், சங்க இயக்குநர் ஆர்.ராஜேஸ்வரி, சால்ட் லேன் இளைஞர்கள் மன்றத்தினர், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.