அதிராம்பட்டினம், ஏப்.23
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன் மூலம் பாடங்கள் நடத்தப்படுவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) அரசு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு மேல் தேர்வு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்.16 ந் தேதி முதல், வாட்ஸ் அப் மூலம் படிப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கப்படுகிறது.
இப்பணிக்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு, அதன் மூலம், பாடங்கள் நடத்தப்படுகிறது. பள்ளியின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளின் ஆசிரியர்கள், தினமும் என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் அதற்குரிய வினாத்தாளை அனுப்பி தேர்வு எழுதும் படியும் ஆலோசனை வழங்குகிறார்கள். இது மாணவர்களுக்கு புதிதாக இருந்தாலும் தேர்வுக்கு தயாராகும் உத்வேகத்தை அளித்துள்ளது. இவை, பெறோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன் மூலம் பாடங்கள் நடத்தப்படுவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பணிக்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு, அதன் மூலம், பாடங்கள் நடத்தப்படுகிறது. பள்ளியின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளின் ஆசிரியர்கள், தினமும் என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் அதற்குரிய வினாத்தாளை அனுப்பி தேர்வு எழுதும் படியும் ஆலோசனை வழங்குகிறார்கள். இது மாணவர்களுக்கு புதிதாக இருந்தாலும் தேர்வுக்கு தயாராகும் உத்வேகத்தை அளித்துள்ளது. இவை, பெறோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.