.

Pages

Thursday, April 9, 2020

அதிராம்பட்டினத்தில் 140 லிட்டர் விலையில்லா பால் பாக்கெட் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.09
பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், 140 லிட்டர் விலையில்லா பால் பாக்கெட் அதிராம்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை காலை விநியோகிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பகுதிகளில் சைக்கிள் வண்டிகள் மூலம் விநியோகித்து வந்த பால் நேற்று ஏப்.7 ந்தேதி முதல் நிறுத்தப்பட்டதால், பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்கள் குழு சார்பில், அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் 280 குடும்பங்களுக்கு 140 லிட்டர் விலையில்லா பாலை விநியோகிக்கும் வகையில், அதிரையின் அந்தந்த மஹல்லா ஜமாத் நிர்வாகிகளிடம், தன்னார்வலர்கள் 'நூவண்ணா' என்கிற எம்.நூர் முகமது, எம்.முகமது தமீம், குப்பாசா எம்.அகமது கபீர், ஓ.கே.எம் தமீம் ஆகியோர் நேரில் சென்று ஒப்படைத்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.