அதிரை நியூஸ்: ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், புதுக்குடி, தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (25.04.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, வாகனத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு உள்ளதா என ஆய்வு செய்யப்படுவதையும், வாகனங்கள் மீது முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கை கழுவும் இடத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து சரக்கு ஏற்றிவரும் வாகனத்தின் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தங்கள் கைகளை கழுவிய பிறகே அவர்களை அனுமதிக்க வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சரக்கு வண்டிகளில் பொதுமக்கள் யாரேனும் பயணிக்கிறார்களா என்பதை கண்காணிப்பு கோபுரத்திலிருந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ரவீந்திரன், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை, தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், புதுக்குடி, தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (25.04.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, வாகனத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு உள்ளதா என ஆய்வு செய்யப்படுவதையும், வாகனங்கள் மீது முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கை கழுவும் இடத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து சரக்கு ஏற்றிவரும் வாகனத்தின் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தங்கள் கைகளை கழுவிய பிறகே அவர்களை அனுமதிக்க வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சரக்கு வண்டிகளில் பொதுமக்கள் யாரேனும் பயணிக்கிறார்களா என்பதை கண்காணிப்பு கோபுரத்திலிருந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ரவீந்திரன், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப்பிள்ளை, தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.