.

Pages

Monday, April 27, 2020

அபுதாபியில் நோன்பு இருந்து வரும் இந்து சமய பெண்!

அபுதாபி : ஏப்.27
அபுதாபியில் இந்து சமயத்தை சேர்ந்த ஸ்ரீதேவி சிவானந்தம் நோன்பினை நோற்று வருகிறார்.

அமீரகத்தில் தற்போது ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பினை நோற்று வருகிறார்.

இந்த நிலையில் அபுதாபியில் வசித்து வரும் இந்து சமயத்தை சேர்ந்த ஸ்ரீதேவி சிவானந்தம் நோன்பு நோற்று சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

ரமலான் மாத நோன்பு என் நம்பிக்கையின் அடையாளம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத மாச்சர்யங்களும், சண்டை சச்சரவுகளும் பெருகி, ஒரு பக்கம் மனித இனத்தின் நிம்மதியைக் கெடுத்து வந்தாலும், இஸ்லாமிய நோன்பு மாதமான ரமலானில் பயபக்தியுடன் நோன்பு நோற்கும் ஸ்ரீதேவி சிவானந்தம், சமயங்கள் கடந்த மனித நேயத்திற்கான ஒரு தலை சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

அதிகாலை நேரமான சஹர் நேரத்தில் அவரிடம் பேசினோம்.

இதோ நோன்பு மாதமான ரமலான் குறித்த அவரது நம்பிக்கை:
"இறைவன் மதங்களையெல்லாம்  கடந்தவன். அதனால் தான், தமிழர்களாகிய நாம் அவனை கடவுள் என்கிறோம். நிச்சயமாக மனித குலம் முழுவதையும் படைத்தது ஒரே இறைவன்தான்.

நான் இஸ்லாமிய நோன்பு மாதமான ரமலானில் சில நேர்த்திக் கடன்களை மனதில் வைத்தே, கடந்த பல வருடங்களாக நோன்பு நோற்று வருகிறேன்.

அதிகாலை சஹரில் எழுந்து உணவருந்துகிறேன். மாலை பாங்கு சொன்னவுடன் நோன்பு திறக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன், நான் வேண்டிய  பலவற்றை, இந்த ரமலான் மாதத்தின் பொருட்டால் எனக்குத் தந்தருள்கிறான் என்று உறுதியாக நம்புகிறேன்.

என்னோடு பசித்திருந்து, விழித்திருந்து, ஏழை எளியவர்க்கு ஈகை தந்து, நோன்பு நோற்கும் உலக முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மன மார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும், ரமலான் முபாரக்"

 இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.