.

Pages

Friday, April 24, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் ரோபோ சேவை!

அதிரை நியூஸ்: ஏப்.24
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் மண்டலம் நோய்த்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் நேரில் பார்வையிட்டு இன்று 24. 04. 2020 ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ம. கோவிந்த ராவ் இருந்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில், சாஸ்தர பல்கலைகழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ரோபோவை, மண்டல கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு அரசு அருங்காட்சியக ஆணையருமாகிய எம்.எஸ் சண்முகம் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவிடம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை ஆய்வு செய்த மண்டல கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு அரசு அருங்காட்சியக ஆணையருமாகிய எம்.எஸ் சண்முகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில், மருத்துவமனை பயன்பாட்டிற்காக ரோபோ ஒன்று வழங்கப்பட்டதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார். சாஸ்தர பல்கலைகழகத்தின் சார்பில் அதன் செல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கும் பொழுது ரோபோ மூலமாக சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் தேவையான மருத்துகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும். இதில் 25  கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லமுடியும் எனவும். ரோபோவை 1 கிலோமீட்டர் துரத்திலிருந்து கூட இயக்க முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும் மருத்துவமனை அலுவலர்களில் கோரிக்கையை ஏற்று மேலும் 4 ரோபோகள் கொடுக்கப்படும் என தெரிவித்தனர். அருகில் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமதி குமுதாலிங்கராஜ் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.