.

Pages

Tuesday, April 28, 2020

பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தென்னை விவசாயிகள் பட்டியல் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.28
பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் பட்டியல் வருவாய் ஆய்வாளரிடம் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று (ஏப்.28) செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுப்படி செய்திருக்கும் தென்னை விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில், கடந்த (ஏப்.16) அன்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து இருந்தனர்.

இதையடுத்து, விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கும் நபரின் பெயர், கிராமப் பகுதியின் பெயர், பாதிக்கப்பட்ட விவசாயி பெயர் ஆகிய விவரங்களை தெரிவித்தால், அங்கு, வட்டார வளர்ச்சி அலுவலரை அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அதிரை அனைது மஹல்லா கூட்டமைப்பு தலைவர் எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர், துணைத்தலைவர் பி.எம்.கே தாஜுதீன், செயலாளர் எம்.நெய்னா முகமது ஆகியோர் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் பட்டியலை அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர்கள் உமர், சரவணன் ஆகியோரிடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினர்.  அப்போது, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முகமது அசாருதீன், கிராம நிர்வாக உதவியாளர்கள் பத்மநாபன், பாலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.