அதிரை நியூஸ்: ஏப்.14
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தப்லீக் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில், கரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக இணைந்து களப்பணியாற்றுவது என முடிவு செய்து, அதன்படி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும், தன்னார்வலர்களைக் கொண்ட 'கரோனா அவசர உதவிக்குழு' அமைக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் களப்பணியாற்றிட, ஏ. ஜபருல்லா பாஜில் மனபஈ (ஜமாத்துல் உலமா), ஷாநவாஸ் லத்திபி (ஜமாத்துல் உலமா), ஏ.எம் ஷாஜஹான் (முஸ்லீம் லீக்), எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன் (முஸ்லீம் லீக்), தஞ்சை ஐ.எம் பாதுஷா (தமுமுக), ஹாஜா நஜ்முதீன் (தமுமுக), மவ்லவி எம்.ஏ முகமது இத்ரீஸ் (ஐக்கிய நலக் கூட்டமைப்பு), இப்ராஹீம் (எஸ்.டி.பி.ஐ), என்.முகமது புஹாரி (எஸ்.டி.பி.ஐ), டாக்டர் முஜிபூர், டாக்டர் அன்வர் ஆகிய 11 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வான தன்னார்வலர்களின் பட்டியல், மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி அவர்களிடம் நேற்று (13-04-2020) திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தப்லீக் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில், கரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக இணைந்து களப்பணியாற்றுவது என முடிவு செய்து, அதன்படி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும், தன்னார்வலர்களைக் கொண்ட 'கரோனா அவசர உதவிக்குழு' அமைக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் களப்பணியாற்றிட, ஏ. ஜபருல்லா பாஜில் மனபஈ (ஜமாத்துல் உலமா), ஷாநவாஸ் லத்திபி (ஜமாத்துல் உலமா), ஏ.எம் ஷாஜஹான் (முஸ்லீம் லீக்), எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன் (முஸ்லீம் லீக்), தஞ்சை ஐ.எம் பாதுஷா (தமுமுக), ஹாஜா நஜ்முதீன் (தமுமுக), மவ்லவி எம்.ஏ முகமது இத்ரீஸ் (ஐக்கிய நலக் கூட்டமைப்பு), இப்ராஹீம் (எஸ்.டி.பி.ஐ), என்.முகமது புஹாரி (எஸ்.டி.பி.ஐ), டாக்டர் முஜிபூர், டாக்டர் அன்வர் ஆகிய 11 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வான தன்னார்வலர்களின் பட்டியல், மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி அவர்களிடம் நேற்று (13-04-2020) திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.