அதிரை நியூஸ்: ஏப்.11
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், இந்திய மருத்துவக் கழக பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வேளாண் பிரதிநிதிகள், ரோட்டரி லயன்ஸ் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட நெருக்கடி கால மேலாண்மைக்குழு ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (11.04.2020) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், அரசின் ஆலோசனையின்படி செயல்பட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள் ஒருங்கிணைந்து 17,749 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டுஅறை) ஆகிய தொலைபேசி எண்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டள்ளவர்களை கண்காணித்தல், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், புள்ளிவிவரங்கள் சேகரித்தல், சமூக இடைவெளியை கண்காணித்தல், 144 தடை உத்தரவு அமலை கண்காணித்தல் ஆகிய பணிகள் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கை வசதிகள் என மொத்தம் 2400 படுக்கை வசதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதுதவிர, ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி கட்டிடத்தில் 200 படுக்கைகள், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 155 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவவனங்கள் மற்றும் அதன் விடுதிகளில் 10383 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2 இரு சக்கர ஆம்புலன்ஸ்கள், 78 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சமுக நலத்துறை மூலம் வயோதிகர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் 044 – 28590804 மற்றும் 044 – 28599188 ஆகிய எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பொது இடங்கள், 8 சோதனைச் சாவடிகள், 26 அரசு அலுவலகங்கள் என மொத்தம் 59 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 39361 நபர்களுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 6025 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 438 நபர்கள என மொத்தம் 7372 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 6346 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள 1827 நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகர பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், கும்பகோணம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவையாறு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவோணம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஒரு நபர், தஞ்சாவூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 11 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 நபர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 73216 வீடுகளைச் சேர்ந்த 296199 நபர்களுக்கு இதுவரை தெர்மல் ஸ்கேனர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 11 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 75 பேருக்கு ஸ்வாப் பரிசோதனைக்காக திருவாரூர் பரிசோதனை மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 21 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 214 பேர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 36 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. 160 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 536 நபர்களுக்கு சுவாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது 349 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என்பது 11 நபர்களுக்க கண்டறியப்பட்டுள்ளது இதில் 176 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம்; 6,52,648 அரிசி குடு;ம்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020 – ஆம் மாதத்திற்கு விலையில்லா அரிசிää பருப்புää சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் 02.04.2020 முதல் இதுவரை 98 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 10 நடமாடும் வாகனங்கள், கும்பகோணம் நகராட்சி பகுதியில் 5 நடமாடும் வாகனங்கள் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் 2 நடமாடும் வாகனங்கள் மூலம்; பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடுகளின் அருகில் கொண்டு சென்று விற்பனை செய்யயப்பட்டு வருகிறது.கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.04.2020 முதல் 42 தற்காலிக சில்லறை காய்கறி கடைகள் திறந்தவெளி மைதானங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்விடங்களில் செயல்படும் காய்கறிகடைகளில் பொதுமக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பொது விநியோக திட்ட பொருட்கள் மற்றும் பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 923 வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதிசீட்டு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்களுக்கு www.thanjavur.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1614 பேருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளியே செல்லமுடியாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 2021 பேருக்கு 13 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்த 3725 தன்னார்வலர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தேவையின் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 732 புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 6609 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால், 3745 இருசக்கர வாகனங்கள் மற்றும் 107 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 3852 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077(கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை கீழையூரைச் சேர்ந்த சிங்காரவடிவேலு - அகிலா தம்பதியரின் 7 வயது மகன் மேகன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் தொகையான 3000 ரூபாயை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினான்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், இந்திய மருத்துவக் கழக பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வேளாண் பிரதிநிதிகள், ரோட்டரி லயன்ஸ் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட நெருக்கடி கால மேலாண்மைக்குழு ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (11.04.2020) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், அரசின் ஆலோசனையின்படி செயல்பட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள் ஒருங்கிணைந்து 17,749 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டுஅறை) ஆகிய தொலைபேசி எண்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டள்ளவர்களை கண்காணித்தல், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், புள்ளிவிவரங்கள் சேகரித்தல், சமூக இடைவெளியை கண்காணித்தல், 144 தடை உத்தரவு அமலை கண்காணித்தல் ஆகிய பணிகள் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கை வசதிகள் என மொத்தம் 2400 படுக்கை வசதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதுதவிர, ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி கட்டிடத்தில் 200 படுக்கைகள், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 155 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவவனங்கள் மற்றும் அதன் விடுதிகளில் 10383 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2 இரு சக்கர ஆம்புலன்ஸ்கள், 78 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சமுக நலத்துறை மூலம் வயோதிகர்களுக்கு கொரோனா தொற்று பரவுதல் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் 044 – 28590804 மற்றும் 044 – 28599188 ஆகிய எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பொது இடங்கள், 8 சோதனைச் சாவடிகள், 26 அரசு அலுவலகங்கள் என மொத்தம் 59 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 39361 நபர்களுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 6025 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 438 நபர்கள என மொத்தம் 7372 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 6346 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள 1827 நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகர பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், கும்பகோணம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவையாறு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவோணம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஒரு நபர், தஞ்சாவூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 11 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 நபர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 73216 வீடுகளைச் சேர்ந்த 296199 நபர்களுக்கு இதுவரை தெர்மல் ஸ்கேனர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 11 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 75 பேருக்கு ஸ்வாப் பரிசோதனைக்காக திருவாரூர் பரிசோதனை மையத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 21 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 214 பேர்களில் இதுவரை பரிசோதனை முடிந்த 36 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. 160 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 536 நபர்களுக்கு சுவாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது 349 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என்பது 11 நபர்களுக்க கண்டறியப்பட்டுள்ளது இதில் 176 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம்; 6,52,648 அரிசி குடு;ம்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020 – ஆம் மாதத்திற்கு விலையில்லா அரிசிää பருப்புää சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் 02.04.2020 முதல் இதுவரை 98 சதவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 10 நடமாடும் வாகனங்கள், கும்பகோணம் நகராட்சி பகுதியில் 5 நடமாடும் வாகனங்கள் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் 2 நடமாடும் வாகனங்கள் மூலம்; பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடுகளின் அருகில் கொண்டு சென்று விற்பனை செய்யயப்பட்டு வருகிறது.கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.04.2020 முதல் 42 தற்காலிக சில்லறை காய்கறி கடைகள் திறந்தவெளி மைதானங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்விடங்களில் செயல்படும் காய்கறிகடைகளில் பொதுமக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பொது விநியோக திட்ட பொருட்கள் மற்றும் பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 923 வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதிசீட்டு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்களுக்கு www.thanjavur.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1614 பேருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளியே செல்லமுடியாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 2021 பேருக்கு 13 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்த 3725 தன்னார்வலர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தேவையின் அடிப்படையில் அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 732 புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 6609 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால், 3745 இருசக்கர வாகனங்கள் மற்றும் 107 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 3852 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077(கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை கீழையூரைச் சேர்ந்த சிங்காரவடிவேலு - அகிலா தம்பதியரின் 7 வயது மகன் மேகன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் தொகையான 3000 ரூபாயை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினான்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.