.

Pages

Wednesday, April 8, 2020

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தஞ்சாவூர், ஏப்.08
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்று இருப்பவா்களின் எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே மாா்ச் 28-ம் தேதி ஒரு நபருக்கும், ஏப்.5-ம் தேதி 4 நபர்களுக்கும், ஏப். 6-ம் தேதி 3 நபர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், ஏப்.6-ம் தேதி மேலும் 3 பேர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பவா்களின் எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது. இவர்களில் 11 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார்.

இதனிடையே, இவா்கள் வசிக்கும் பகுதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. மேலும், இவா்களது உறவினா்களுக்கும், உடன் இருந்தவா்களுக்கும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.