.

Pages

Wednesday, April 8, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.08
அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என அவ்வமைப்பின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்று (ஏப்.08) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
தற்போது அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு பால், காய்கறிகள், மளிகை சாமான்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களுக்கு ஏதேனும் திடீர் இடையூறு ஏற்பட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ கீழ்காணும் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகளை உடனடியாக தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம்.

ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர் (9790629382)
பி.எம்.கே தாஜுதீன் (9750044349)
ஹாஜி எம்.நெய்னா முகமது (9442223190)
ஏ.தாஜுதீன் (9789329723)
என்.முகமது ஜபருல்லா (9688996034)
பி.எம்.எஸ் அகமது அமீன்  (6385399934)
டி.அகமது அனஸ் (9994247111)
சேக்கனா எம்.நிஜாமுதீன் (9442038961)
இ.வாப்பு மரைக்காயர் (9944588689)

மேலும், பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், பால் மொத்த விற்பனை நிலையம் மூலம் கொள்முதல் செய்து, அந்தந்த மஹல்லா ஜமாத்தார் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக பால் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பால் தேவையுடையோர் 9750044349, 9442223190 ஆகிய அலைப்பேசி எண்களில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.