.

Pages

Wednesday, April 8, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.08
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (08.04.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு, முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் அறையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் உணவுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் அறை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர்  வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை இடைவெளிவிட்டு சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும், மருத்துவமனை சிகிச்சை அறைகள் மற்றும் வளாகத்தில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கொரோனா சிகிச்சை பிரிவில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 1200 படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதி, நுண்ணுயிரியல்  ஆய்வகத்தில் தயார் நிலையிலுள்ள இரண்டு ஆய்வகத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், கொரோனா நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, தொற்றுநோய் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் - சுதா தம்பதியரின் 5 வயது மகன் சாய் க்ரிஷ் என்ற சிறுவன், கடந்த ஒரு வருடமாக தன்னுடைய பெற்றோர் கொடுத்ததன் மூலம் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் 1500 ரூபாயை கொரோனா தடுப்பு நிதியுதவியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினான்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.