.

Pages

Wednesday, April 15, 2020

திமுக சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கிருமிநாசினி வழங்கல்!

தஞ்சாவூர் ஏப்.15-
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, திமுக ஒன்றியக் கழகம், திமுக மருத்துவ அணி சார்பில் கை கழுவும் லிக்விட் சோப், சானிடைசர், கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன் தலைமை வகித்தார். டாக்டர் பண்ணவயல் எஸ்.ஆர்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

இதில் 500 பேர் பயன்படுத்தும் வகையில் கை கழுவும் சோப், சானிடைசர், கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜனிடம் வழங்கப்பட்டது.

அப்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆரோ.அருள், ஒன்றியக்குழு உறுப்பினர் மாலா போத்தியப்பன், செருவாவிடுதி குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் செருவாவிடுதி வடக்கு விஜயராமன், தெற்கு ராமஜெயம், திமுக ஊராட்சிக் கழக செயலாளர்கள் சக்திவேல், ஞானவேல், ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.