.

Pages

Saturday, April 18, 2020

அதிராம்பட்டினத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு சீல் வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.18
அதிராம்பட்டினத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளை பேரூராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அமலில் உள்ள ஊரடங்கில், அனைத்து கடைகளும் மூடப்பட்டு மளிகை, பால், காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள் பிரகாசம் ஆகியோர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜீவ் உள்ளிட்டோர் கடைத்தெரு பகுதியில், 144 தடை உத்தரவு விதிமுறைகளை மீறி திறந்திருந்த கணினி உதிரி பாகங்கள் விற்பனை, எலெக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் உள்ளிட்ட 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனா். மேலும், விதிகளை மீறி செயல்படும் மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உட்பட 10 க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள் பிரகாசம் அதிராம்பட்டினம் பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.