அதிரை நியூஸ்: ஏப்.28
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கும் பணியினை மண்டல கொரோனா தடுப்புப் பணிக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் சிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல கொரோனா தடுப்புப் பணிக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவது குறித்து மண்டல கொரோனா தடுப்புக் குழு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முன்கள பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், கணக்கெடுப்பாளர்கள், தன்னார்வலர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது குறித்து மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊடக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, திருவிடைமருதூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜகோபால் என்பவர் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையால், அவரது மனைவி திருமதி.சரண்யா என்பவருக்கு வருவாய்த்துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியுதவியாக ரூபாய் 20 இலட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 24-வது 108 ஆம்புலன்ஸ் வாகனமாக துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.முத்து மீனாட்சி, இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்), துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.ரவீந்திரன், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கும் பணியினை மண்டல கொரோனா தடுப்புப் பணிக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் சிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல கொரோனா தடுப்புப் பணிக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவது குறித்து மண்டல கொரோனா தடுப்புக் குழு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முன்கள பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், கணக்கெடுப்பாளர்கள், தன்னார்வலர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது குறித்து மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊடக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, திருவிடைமருதூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜகோபால் என்பவர் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையால், அவரது மனைவி திருமதி.சரண்யா என்பவருக்கு வருவாய்த்துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியுதவியாக ரூபாய் 20 இலட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 24-வது 108 ஆம்புலன்ஸ் வாகனமாக துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.முத்து மீனாட்சி, இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்), துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.ரவீந்திரன், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.