தஞ்சாவூர் ஏப். 26-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா, ராஜேஸ்வரி தம்பதிகள். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதிகள் இருவரும் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நாசம் அடைந்தது. மேலும், குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதையடுத்து வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். செங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரை. மாணிக்கம் ஆகியோரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்நிலையில், தீ விபத்து குறித்து அறிந்த, செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, உதவிகளை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முன்வந்தார்.
இதையடுத்து உடனடியாக குடிசை வீடு புதிதாக கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்தினருக்கு தேவையான உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், பழங்கள், பிஸ்கட், பால் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்டர் வி. சௌந்தரராஜன் நேரடியாகச் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட தம்பதிகள் கண்ணீர் மல்க டாக்டர் சௌந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர். உடனடியாக பால் காய்ச்சி வீட்டில் குடி புகுந்தனர்.
இதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் செல்வம் வீடு கட்டி தந்தமைக்காக டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது சமூக ஆர்வலர் கே.கான் முகம்மது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஊரணி கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை பொருளாளர் ராஜூ, சுகாதார செவிலியர் லில்லி மேரி மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா, ராஜேஸ்வரி தம்பதிகள். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதிகள் இருவரும் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நாசம் அடைந்தது. மேலும், குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதையடுத்து வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். செங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரை. மாணிக்கம் ஆகியோரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்நிலையில், தீ விபத்து குறித்து அறிந்த, செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, உதவிகளை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முன்வந்தார்.
இதையடுத்து உடனடியாக குடிசை வீடு புதிதாக கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்தினருக்கு தேவையான உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், பழங்கள், பிஸ்கட், பால் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்டர் வி. சௌந்தரராஜன் நேரடியாகச் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட தம்பதிகள் கண்ணீர் மல்க டாக்டர் சௌந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர். உடனடியாக பால் காய்ச்சி வீட்டில் குடி புகுந்தனர்.
இதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் செல்வம் வீடு கட்டி தந்தமைக்காக டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது சமூக ஆர்வலர் கே.கான் முகம்மது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஊரணி கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை பொருளாளர் ராஜூ, சுகாதார செவிலியர் லில்லி மேரி மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.